தேடல் தொடங்கியதே..

Friday 9 August 2013

கீழக்கரையில் நோன்புப் பெருநாளையொட்டி களை கட்டிய 'கிடாக் கறி' விற்பனை - இறைச்சிக் கடைகளில் விடிய விடிய அலை மோதிய மக்கள் கூட்டம் !

கீழக்கரை நகரில் நோன்புப் பெருநாள் அறிவிப்பினைத் தொடர்ந்து, அனைத்து இறைச்சிக் கடைகளிலும், இரவு 8 மணி முதல் களை கட்டத் துவங்கிய விற்பனை, விடிய விடிய தொடர்ந்து நடை பெற்றது. கீழக்கரை இல்லங்களில் சமைக்கப்படும் பெருநாளின் ஸ்பெசல் உணவுகள் பெரும்பாலும் மட்டன் வகையை சார்ந்ததாகவே இருக்கும். இதனால் முதல் நாள் இரவே கிடாக் கறி இறைச்சியை பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டுவர். இதனால் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலை மோதியது.

இடம் : 'ஹபீபு காக்கா' கறிக் கடை, முஸ்லீம் பஜார் 




கீழக்கரையில் தற்போது கிடாக் கறி விலை ரூ.400 க்கு விற்கப்படுகிறது. நண்பர்கள் சிலர் கூட்டாக ஒரு முழு ஆட்டினை வாங்கி, அறுத்து பங்கிட்டுக் கொண்டனர். ஏர்வாடியில் விலை குறைவாக இருப்பதாக கூறி, அங்கும் சென்று சிலர் வாங்கி வந்தனர். ஆனால் அங்கு வெள்ளாடுகள் தான் அதிகம் அறுக்கப்படுவதாக தெரிகிறது. கீழக்கரை பகுதி மக்கள் வெள்ளாட்டு கறியை அதிகம் விரும்பி உண்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. உங்கள்
    புகை படங்கள்
    எங்கள்
    பிரிவு புண்களுக்கு
    ஒத்தடங்கள்
    உடல் பல
    கடல் கடந்தாலும்
    உள்ளம்
    ஊரிலே நிற்கிறது
    எப்பொழுதோ
    என்னில் எழுந்த
    கனவுகள்
    ஊரின் தொன்மைகளை
    உலகுக்கு எடுத்து இயம்பல்
    தின நிகழ்வுகளை
    படம் பிடித்தல் என்பதை
    நனவாக்கிய
    உங்கள் உன்னத பணி தொடரட்டும்
    உவகை பொங்கும்
    இத் திருநாளில்
    உங்களுடன்
    உங்கள் குடும்பங்களுக்கும்
    சிறக்கட்டும்

    ReplyDelete
  2. உங்கள்
    புகை படங்கள்
    எங்கள்
    பிரிவு புண்களுக்கு
    ஒத்தடங்கள்
    உடல் பல
    கடல் கடந்தாலும்
    உள்ளம்
    ஊரிலே நிற்கிறது
    எப்பொழுதோ
    என்னில் எழுந்த
    கனவுகள்
    ஊரின் தொன்மைகளை
    உலகுக்கு எடுத்து இயம்பல்
    தின நிகழ்வுகளை
    படம் பிடித்தல் என்பதை
    நனவாக்கிய
    உங்கள் உன்னத பணி தொடரட்டும்
    உவகை பொங்கும்
    இத் திருநாளில்
    உங்களுடன்
    உங்கள் குடும்பங்களுக்கும்
    சிறக்கட்டும்

    ReplyDelete