தேடல் தொடங்கியதே..

Sunday 28 April 2013

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் 18 ஆண்டுகள் பணியாற்றிய தாளாளருக்கு 'பிரிவு உபசார விழா' - ஜமாத்தார்கள், சமூக நல அமைப்பினர்கள், பங்கேற்பு !


கீழக்கரை கிழக்குத் தெரு, கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டு முதல், நேற்றைய தேதி வரை, ஏறத்தாழ 18 ஆண்டு காலங்கள், தொடர்ச்சியாக பள்ளி தாளாளராக, சிறப்பாக பணியாற்றிய  ஜனாப்.செய்யது இபுறாஹீம் (ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று (27.04.2013) சனிக் கிழமை மாலை 4.30 மணியளவில் கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. 



இந்த சிறப்பான விழாவிற்கு கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர். ஜனாப். ப.அ. சேகு அபூபக்கர் சாகிபு காக்கா, கல்விக் குழு பொறுப்பாளர் ஜனாப். சுஐபு காக்கா,  கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மால் பொறுப்பாளர். ஜனாப்.முஹைதீன் தம்பி காக்கா, கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியின் தாளாளர். முனைவர்.சாதிக் காக்கா, சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் தாளாளர். ஜனாப்.ஜமாலுதீன் காக்கா, பள்ளியின் புதிய தாளாளர் ஜனாப். ஜவஹர் சாதிக் காக்கா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.



இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர். திரு.சுரேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின்   செயலாளர் ஜனாப். பசீர் அகமது,  நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர். திரு. தங்கம் இராதா கிருஷ்ணன், பள்ளியின் ஆசிரிய பெருந்தகைகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ், நிர்வாகி திரு. விஜயன், மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர் ஜனாப். முஹம்மது சாலிஹ் ஹுசைன், கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாப்.செய்யது இபுறாஹீம் அவர்கள் சதர்ன் இரயில் வேயில், தமிழ் நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் 36 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.  மேலும் சதர்ன் இரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய காலத்தில் விபத்துகளே இல்லாமல் மகத்தான சேவை புரிந்தமைக்காக  இரயில்வே அமைச்சரின் கைகளால் விருது, ரொக்கப் பரிசு, பாராட்டிதழ் போன்றவை பெற்று இருக்கிறார். தற்போது இவர்கள் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட, இளமை துடிப்போடு, எந்நேரமும்  'எறும்பு போல்' சுறுசுறுப்பாகவும்,   நேரம் தவறாமையை தன் வாழ்வில் கடை பிடித்து வருகிறார்.

கீழக்கரை நகரின் சமூக நலனில் அக்கறை கொண்ட  இந்த 86 வயதை கடந்த  இளைஞர், தன் ஓய்வு நேரம் முழுவதும் பொது நல பணிகளுக்காக தன்னை அர்பணித்து வருகிறார். இப்போது கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவராக தலைமையேற்று சேவை ஆற்றி வருகிறார். ஏற்கனவே நுகர்வோர்களுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழக்கரையில் நுகர்வோர் சேவை இயக்கம் ஒன்றை உருவாக்கி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 

இறைவன் அருளால், இளைஞர். ஜனாப்.செய்யது இபுறாஹீம் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலங்கள், நீண்ட ஆயுளுடனும், சரீர சுகத்துடனும் வாழ்ந்து, அவர்களின் சமூகப் பணிகள் செழித்தோங்க, கீழை இளையவன் வலை தளம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது.

No comments:

Post a Comment