தேடல் தொடங்கியதே..

Saturday 8 September 2012

கீழக்கரையில் காலை நேரங்களில் கழிவறையாகும் கலங்கரை விளக்கம் பகுதி - பொதுக் கழிப்பறை ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை !

கீழக்கரையில் பழைய கஸ்டம்ஸ் கட்டிடம் பகுதியிலிருந்து 18 வாலிபர்கள் தர்ஹா பகுதி வரையுள்ள கடற்கரை ஓரங்களில் அதி காலை 5.30 மணியிலிருந்து காலை 8 மணி வரை கட்டணமில்லா கழிவறை பகுதியாக திகழ்ந்து வருகிறது. இந்த நேரங்களில் கலங்கரை விளக்கம் பகுதியில் நடை பயிற்சிக்கு வரும் பொதுமக்கள், மனம் நொந்து, மூக்கையும், கண்களையும் பொத்தியவர்களாக ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகி விடுகின்றனர். இங்கு திறந்த வெளியில் காலைக் கடன் முடித்து செல்பவர்களால், இந்த பகுதியில் சகிக்க முடியாத துர்நாற்றத்துடன், மிக மோசமான சுகாதாரக் கேடு நிலவுகிறது.



இது குறித்து நடைபயிற்சிக்கு வந்திருந்த கிழக்குத் தெருவைச் சேர்ந்த அகமது ஜமால் அவர்கள் கூறும் போது "நான் இன்று தான் இந்த பகுதியில் நடைபயிற்சிக்காகவும், அதி காலை நேரத்தில் கடல் அழகாய் இரசிப்பதற்காகவும் வந்தேன். ஆனால் இங்கு காணும் காட்சிகளும், வீசும் துர்நாற்றமும் தாங்க முடியாததால்,'இன்றோடு இப்படம் கடைசி'... அவ்வளவு அருவருப்பாக, மோசமாக காட்சியளிக்கிறது. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், அரை நிர்வாணமாக குந்தி அமர்ந்திருக்கிறார்கள்" என்று தன் மனக் குமுறலை கொட்டினார்.

இதுக்கு கூட எங்களுக்கு சுதந்திரம் இல்லையா ???

இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் நிர்வாகி ஜனாப்.சீனி முஹம்மது சேட் அவர்கள் கூறும் போது "நானும் எனது நண்பரும் தினமும் இந்த பகுதிக்கு வாக்கிங் வருகிறோம். முதலில் துர் நாற்றம் தாங்க முடியாமல் தலை கிறு கிறுத்துப் போனது. இப்போது போகப் போக பழகி விட்டது. புதிதாக் யாரும் வந்து, இந்த செயலை செய்யவில்லை. வழக்கமாக வருபவர்கள் தான் இங்கு 'டிசைன் டிசைனா' கழித்துச் செல்கிறார்கள். இவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. வேறு வழியின்றி தான் இங்கு வருகிறார்கள். இந்த 'சுதந்திர மனிதர்களுக்கு' நகராட்சியில் இருந்து பொதுக் கழிப்பிட வசதி உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்." என்று வேண்டுகோள் விடுத்தார்.


இது குறித்து இந்த பகுதியில், ஹாயாக காலை கடனை முடித்து விட்டு திரும்பிய ஒருவரிடம் பேசிய போது கீழக்கரை நகரில் பெரும்பாலான வீடுகளில் தற்போது கழிப்பறை வசதிகள் உள்ளது. இருப்பினும் பல தெருக்களில்  மிகச் சிறிய பரப்பளவுள்ள வீடுகளில், அதிக எண்ணிகையிலான குடும்ப உறுப்பினர்கள் வசிக்கின்றனர். காலை நேரங்களில் ஒரே நேரத்தில், அனைவரும் கழிவறையை பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுவதால், கடற்கரை போன்ற இடங்களை நாட வேண்டியுள்ளது.  பொது கழிப்பறை வசதி இருந்திருந்தால், நாங்கள் ஏன் இங்கு வருகிறோம் ?" என்று கேள்வி எழுப்பியவராக நடையை கட்டினார்.


என்ன செய்யலாம் ? ஒரு  ஆலோசனை சொல்லுங்கப்பா...




கீழக்கரை ஜின்னா தெருவில் மட்டுமே காணப்படும் மகளீருக்கான பொதுக் கழிப்பறையும் பல வருடங்களாக உபயோகமில்லாமல் சுகாதார சீர்கேடுடன் பூட்டியே உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூடுதல் கழிப்பறைகளும் கட்டப்பட்டு, இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. டிரான்ஸ்பார்மர் பின்னணியில் இந்த கழிவறை அமைந்திருப்பதால், பொது மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். கீழக்கரை நகராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக 'புதிய கழிவறைகள்' கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பொதுமக்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்காமல், கடற்கரையில் காலை கடன் முடிக்க வருபவர்களை குறை கூறி பயனொன்றுமில்லை..


5 comments:

  1. பன் முகம் கொண்ட தாங்கள், நகரின் அவல நிலமையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு நில்லாது அது சமபந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முகமாகவும் செய்திகளை பதிவு செய்வது அனைவருக்கும் ஏற்புடைய பாராட்டுக்குரிய விஷயமாகும்..

    இத்துடன் கடமை முடிந்து விட்டது என வெருமனே இருந்து விடாமல் அவல நிலைமையை சீர் களைய சம்பந்தப்பட்ட அதிகார வர்கத்திற்கு தகவலை எத்த வைப்பதோடு அதை நடவடிக்கைக்கு உள்ளாகும் வரை தொடர் முய்ற்சியில் ஈடுபடுவதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இது முகஸ்துதிக்காக சொல்லப்படுவதில்லை..அடி மனதிலிருந்து வரும் இதயங் கனிந்த பராட்டுகளாகும்.

    மக்கள் மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் (முஸ்லீம்:4638)எனற் சத்திய ஹதீஸ் வசனங்களுக்கு ஏறப நிச்சயமாக கருணை மிக்க அல்லாஹுதாலாவிடத்தில் கூலி உண்டு.தாங்களுக்கு மட்டும் அல்லாது தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் அனைத்து சமூக நல அமைப்பை சார்ந்த சகோதரர்களுக்கும் அந்த கூலியில் பங்கு உண்டு..

    நகரில் உள்ள அனத்து சமூக அமைப்புகளைப் பற்றி முழு அளவில் (அமைப்பின் பெயர், தொலைபோசி எண்ணுடன் முகவரி, நிர்வாக உறுப்பினர்கள)தந்தால் உதவிகரமாக இருக்கும்.
    ReplyDelete
  2. கீழக்கரைக்கு நவீன கழிப்பரைபற்றி கீழக்கரை சேர்மன் வளைதளத்தில் நான் ஏற்க்கனவே என்னுடைய கருத்தை பதிவுசெய்திரிக்கிறேன் எவ்வித பயனுமில்லை ஜின்னாதெருவில் அமைந்திருக்கும் நவீன கழிப்பறையை சுத்தம் செய்வதற்கும் பாதுகாக்கவும் கீழக்கரையில் பரவிக்கிடக்கும் சங்கங்கள் சொந்த செலவில் நகராட்சி அனுமதியுடன் காலை மாலை நேரங்களில் மட்டுமாவது பகுதிவேலைக்கு ஒரு பாதுகாவலரை நியமிக்கலாமே..
    ReplyDelete
  3. மிகவும் அவசியமான இடங்களில் பொது கழிப்பறைகள் நம்து நகரில் கட்டுவது என்பது நடக்காத காரியம். காரணம் நகருக்குள் அனைத்துமே வீட்டடி நிலங்கள்..சத்ர அடி ரூ.2000 முதல் 2500.. அரசு நிலங்களும் அறவே கிடையாது.. இருக்கும் ஒரு இடமும் (ஜின்னா தெருவில்) பயன்பாட்டிக்கு வர முடியாத நிலையில் உள்ளது.. ஆங்காங்கே பொது கிணறுகள் இருந்த இடங்கள் சில உண்டு.அவைகளை இந்த பயன்பாட்டிற்கு கொண்டு வர முனைந்தால் பொது மக்களின் பல்த்த எதிர்ப்பை சந்திக்க வேண்டியது வரும்..

    இன்றைய நிலையில் நகரில் ஏழை, பணக்காரன் என பேதம் இல்லாமல் அனைவரின் வீட்டிலும் கழிப்பறைகள் உண்டு.(கை விட்டு எண்ணக்கூடிய அளவில் சில வீடுகளில் இல்லாமல் இருக்கலாம்)..கடற்கரை அருகே குடி இருக்கும் சிலரும், வெளியூரிலிருந்து இங்கு வந்து மீன் பிடி தொழில் ஈடுபட்டிருக்கும் சிலரும் வெட்கத்தை துறந்து இந்த அசிங்கத்தை செய்கிறார்கள்.. இவர்கள் மனது வைத்தால் குறிப்பாக உள்ளூர் வாசிகள் (மீன் பிடி தொழிலுக்காக குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே வருவார்கள்)இந்த இழிநிலை நிச்சயமாக மாறும்..
    ReplyDelete
  4. முன் காலங்களில் நகரில் கட்டுமான வீடுகளில் எடுப்பு கக்கூஸ் முறை இருந்தது.. அதாவது மனித கழிவுகளை மனிதனே எடுத்துச் செலவது. வீடுகளில் முகப்பு ப்குதியில் ஒரு சிறிய அறை எடுத்து அதில் சுமார் மூன்று அடி உயரத்தில் ஒரு சிமெண்ட சிலாபின நடுவில் ஒரு வட்ட வடிவ துளை போட்டு அதன் கீழே ஒரு இரும்பு வாளியை வைத்து, தெருவில் கதவுடன் கூடிய சிறிய நிலையை வைத்து விடுவார்கள்..தினமும் காலையில் துப்பரவு தொழிலாளி துப்பரவு செய்து விடுவார். அந்த காலக் கட்டங்களில் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். இதனால் சாம்பல் கிடைக்கும்..இதை கழிப்பறையில் சேகரித்து வைத்து காரியம் முடிந்ததும் கழிவை மூடி விடுவார்கள். இதனால் வீட்டிற்குள் துர்நாற்றமும் இருக்காது..

    இது போக பெண்களுக்காக நகரின் சில முக்கிய பகுதிகளில் “கொளக்காடு” எனும் சுற்று சுவருடன் கூடிய திறந்த வெளி கழிப்பிடங்கள் இருந்தது.. அங்கு ஒன்றோ, இரண்டோ பொதுக் கிணறுகளும் இருக்கும். அதிகாலையில் வயதுக்கு வந்த பெண்கள் உட்பட கொளக்காடு சென்று காலை கடன்களை முடித்து, கொண்டு சென்ற துணிமணிகளை துவைத்து, பின் குளித்து விட்டு வருவார்கள்..அப்போதெல்லாம் கொளக்காட்டை சுற்றி மாடி வீடுகள் கிடையாது. அனேகமாக எல்லாமே மாடி இல்லாத ஓட்டு வீடுகளும், தென்னங்கூரை வெய்த வீடுகள்தான்.. இதனால் பெண்கள் அச்சமின்றி பயன் படுத்தினார்கள்..T B C >>>
    ReplyDelete
  5. மேலும் முன் காலங்களில் ஆண்கள் குளிக்க, துணி துவைக்க. காலைக் கடன்களை முடிக்க, இப்போது புது கிழக்குத் தெருவாக மாறி இருக்கும் இடத்திலும், மேலத்தெரு ஹமீதியா பள்ளி விளையாட்டு திடலுக்கு மேற்கு பகுதியை சுற்றிலும் நிறைய தென்னந் தோப்புகள் இருந்தன.. அங்கு கிணறுகளும், தண்ணீர் இறைக்க வாளியுடன் கூடிய திலா மரமும். தண்ணீரை சேகரிக்க சிமெண்ட் தொட்டி களும் இருக்கும். அனுமதி இலவசம்.(இதன் நிழல் காட்சியை காண வேண்டுமானால், பேஸ் புக்கில் Mke Moulana என்ற பக்கத்தில் போட்டோ தொகுப்பில் கண்டு களிக்களாம்).. இது போக நகரில் ஆண்களின் குளியல் பயன்பாட்டிற்கு நிறைய குளக்களும் இருந்தன.. அது ஒரு கனாக்காலம்.. சீதன வீடு பிரச்சனையாலும் , கல்விச்சாலை களுக்கு இடமின்மையாலும் கால ஓட்டத்தில் அவையெல்லாம் மறைந்து மூத்த குடி மக்களின் மலரும் நினைவுகளாகி விட்டன..



    Riffan Zyed : Kind request to Mr. keelai ilayavan : Please prepare a complaint letter and send it to concerned department officials. mere news is not a solution.
     
     
    Keelai Ilayyavan அன்பு Riffan Zyed அவர்களுக்கு, தங்களின் கருத்துப் பதிவுக்கு நன்றி.. கீழை இளையவன் வலை தள பக்கத்தில் பதியப்படும் அனைத்து புகார் செய்திகளும், வெறும் பதிவோடும், பகிர்வுகளோடும் மட்டும் நின்று விடுவதில்லை.

    மாறாக, தகுந்த புகைப்பட ஆதாரங்களுடனும், பொது மக்களின் ஆதாரப்பூர்வ பதியப்பட்ட வாக்கு மூலங்களுடனும், சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு, பொது நல அமைப்புகளின் உதவியோடு அனுப்பப்படுகிறது. மேலும் அந்தந்த மனுக்கள், முறையாக FOLLOW-UP செய்யப்பட்டு, நல்ல தீர்வுகள் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நல்ல தருணத்தில், அதற்காக பெரும் ஒத்துழைப்புகளை நல்கி வரும் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் (KMSS), கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை, கீழக்கரை நகர் நல இயக்கம், பிக்ருல் ஆகீர் இஸ்லாமிய ஒருங்கிணைப்பு சங்கம் மற்றும் இதற்காக காலம் நேரம் பாராமல் பாடுபடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    அன்புடன்
    கீழை இளையவன்

5 comments:

  1. பன் முகம் கொண்ட தாங்கள், நகரின் அவல நிலமையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு நில்லாது அது சமபந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முகமாகவும் செய்திகளை பதிவு செய்வது அனைவருக்கும் ஏற்புடைய பாராட்டுக்குரிய விஷயமாகும்..

    இத்துடன் கடமை முடிந்து விட்டது என வெருமனே இருந்து விடாமல் அவல நிலைமையை சீர் களைய சம்பந்தப்பட்ட அதிகார வர்கத்திற்கு தகவலை எத்த வைப்பதோடு அதை நடவடிக்கைக்கு உள்ளாகும் வரை தொடர் முய்ற்சியில் ஈடுபடுவதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இது முகஸ்துதிக்காக சொல்லப்படுவதில்லை..அடி மனதிலிருந்து வரும் இதயங் கனிந்த பராட்டுகளாகும்.

    மக்கள் மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் (முஸ்லீம்:4638)எனற் சத்திய ஹதீஸ் வசனங்களுக்கு ஏறப நிச்சயமாக கருணை மிக்க அல்லாஹுதாலாவிடத்தில் கூலி உண்டு.தாங்களுக்கு மட்டும் அல்லாது தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் அனைத்து சமூக நல அமைப்பை சார்ந்த சகோதரர்களுக்கும் அந்த கூலியில் பங்கு உண்டு..

    நகரில் உள்ள அனத்து சமூக அமைப்புகளைப் பற்றி முழு அளவில் (அமைப்பின் பெயர், தொலைபோசி எண்ணுடன் முகவரி, நிர்வாக உறுப்பினர்கள)தந்தால் உதவிகரமாக இருக்கும்.

    ReplyDelete
  2. கீழக்கரைக்கு நவீன கழிப்பரைபற்றி கீழக்கரை சேர்மன் வளைதளத்தில் நான் ஏற்க்கனவே என்னுடைய கருத்தை பதிவுசெய்திரிக்கிறேன் எவ்வித பயனுமில்லை ஜின்னாதெருவில் அமைந்திருக்கும் நவீன கழிப்பறையை சுத்தம் செய்வதற்கும் பாதுகாக்கவும் கீழக்கரையில் பரவிக்கிடக்கும் சங்கங்கள் சொந்த செலவில் நகராட்சி அனுமதியுடன் காலை மாலை நேரங்களில் மட்டுமாவது பகுதிவேலைக்கு ஒரு பாதுகாவலரை நியமிக்கலாமே..

    ReplyDelete
  3. மிகவும் அவசியமான இடங்களில் பொது கழிப்பறைகள் நம்து நகரில் கட்டுவது என்பது நடக்காத காரியம். காரணம் நகருக்குள் அனைத்துமே வீட்டடி நிலங்கள்..சத்ர அடி ரூ.2000 முதல் 2500.. அரசு நிலங்களும் அறவே கிடையாது.. இருக்கும் ஒரு இடமும் (ஜின்னா தெருவில்) பயன்பாட்டிக்கு வர முடியாத நிலையில் உள்ளது.. ஆங்காங்கே பொது கிணறுகள் இருந்த இடங்கள் சில உண்டு.அவைகளை இந்த பயன்பாட்டிற்கு கொண்டு வர முனைந்தால் பொது மக்களின் பல்த்த எதிர்ப்பை சந்திக்க வேண்டியது வரும்..

    இன்றைய நிலையில் நகரில் ஏழை, பணக்காரன் என பேதம் இல்லாமல் அனைவரின் வீட்டிலும் கழிப்பறைகள் உண்டு.(கை விட்டு எண்ணக்கூடிய அளவில் சில வீடுகளில் இல்லாமல் இருக்கலாம்)..கடற்கரை அருகே குடி இருக்கும் சிலரும், வெளியூரிலிருந்து இங்கு வந்து மீன் பிடி தொழில் ஈடுபட்டிருக்கும் சிலரும் வெட்கத்தை துறந்து இந்த அசிங்கத்தை செய்கிறார்கள்.. இவர்கள் மனது வைத்தால் குறிப்பாக உள்ளூர் வாசிகள் (மீன் பிடி தொழிலுக்காக குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே வருவார்கள்)இந்த இழிநிலை நிச்சயமாக மாறும்..

    ReplyDelete
  4. முன் காலங்களில் நகரில் கட்டுமான வீடுகளில் எடுப்பு கக்கூஸ் முறை இருந்தது.. அதாவது மனித கழிவுகளை மனிதனே எடுத்துச் செலவது. வீடுகளில் முகப்பு ப்குதியில் ஒரு சிறிய அறை எடுத்து அதில் சுமார் மூன்று அடி உயரத்தில் ஒரு சிமெண்ட சிலாபின நடுவில் ஒரு வட்ட வடிவ துளை போட்டு அதன் கீழே ஒரு இரும்பு வாளியை வைத்து, தெருவில் கதவுடன் கூடிய சிறிய நிலையை வைத்து விடுவார்கள்..தினமும் காலையில் துப்பரவு தொழிலாளி துப்பரவு செய்து விடுவார். அந்த காலக் கட்டங்களில் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். இதனால் சாம்பல் கிடைக்கும்..இதை கழிப்பறையில் சேகரித்து வைத்து காரியம் முடிந்ததும் கழிவை மூடி விடுவார்கள். இதனால் வீட்டிற்குள் துர்நாற்றமும் இருக்காது..

    இது போக பெண்களுக்காக நகரின் சில முக்கிய பகுதிகளில் “கொளக்காடு” எனும் சுற்று சுவருடன் கூடிய திறந்த வெளி கழிப்பிடங்கள் இருந்தது.. அங்கு ஒன்றோ, இரண்டோ பொதுக் கிணறுகளும் இருக்கும். அதிகாலையில் வயதுக்கு வந்த பெண்கள் உட்பட கொளக்காடு சென்று காலை கடன்களை முடித்து, கொண்டு சென்ற துணிமணிகளை துவைத்து, பின் குளித்து விட்டு வருவார்கள்..அப்போதெல்லாம் கொளக்காட்டை சுற்றி மாடி வீடுகள் கிடையாது. அனேகமாக எல்லாமே மாடி இல்லாத ஓட்டு வீடுகளும், தென்னங்கூரை வெய்த வீடுகள்தான்.. இதனால் பெண்கள் அச்சமின்றி பயன் படுத்தினார்கள்..T B C >>>

    ReplyDelete
  5. மேலும் முன் காலங்களில் ஆண்கள் குளிக்க, துணி துவைக்க. காலைக் கடன்களை முடிக்க, இப்போது புது கிழக்குத் தெருவாக மாறி இருக்கும் இடத்திலும், மேலத்தெரு ஹமீதியா பள்ளி விளையாட்டு திடலுக்கு மேற்கு பகுதியை சுற்றிலும் நிறைய தென்னந் தோப்புகள் இருந்தன.. அங்கு கிணறுகளும், தண்ணீர் இறைக்க வாளியுடன் கூடிய திலா மரமும். தண்ணீரை சேகரிக்க சிமெண்ட் தொட்டி களும் இருக்கும். அனுமதி இலவசம்.(இதன் நிழல் காட்சியை காண வேண்டுமானால், பேஸ் புக்கில் Mke Moulana என்ற பக்கத்தில் போட்டோ தொகுப்பில் கண்டு களிக்களாம்).. இது போக நகரில் ஆண்களின் குளியல் பயன்பாட்டிற்கு நிறைய குளக்களும் இருந்தன.. அது ஒரு கனாக்காலம்.. சீதன வீடு பிரச்சனையாலும் , கல்விச்சாலை களுக்கு இடமின்மையாலும் கால ஓட்டத்தில் அவையெல்லாம் மறைந்து மூத்த குடி மக்களின் மலரும் நினைவுகளாகி விட்டன..

    ReplyDelete