தேடல் தொடங்கியதே..

Sunday 2 September 2012

கீழக்கரையில் சுகாதாரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பலகைகள் அமைப்பு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் ஏற்பாடு !

கீழக்கரை நகரின் பல பகுதிகளில் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பில் அதன் நிர்வாகிகளான கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம், முஹம்மது சாலிஹ் ஹுசைன்,பாபா பக்ரூதீன், மாணிக்கம், உள்ளிட்டோர் சுகாதாரத்தை வலியுறுத்தி, தாங்களே முன் வந்து நகரில் குப்பைகள் நிறைந்துள்ள பகுதிகளில் விழிப்புணர்வு பலகைகளை நிறுவி வருகின்றனர். கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் (KMSS) தலைவர். ஜமால் அஸ்ரப் அவர்கள் கூறும் போது  "தங்கள் சங்கமும் இந்த நல்ல முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.




இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் தமீமுதீன் அவர்கள் கூறும் போது, "சுற்றுப் புற சுகாதாரம் நம் வாழ்வின் ஒரு பாதி. சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணாமல் நலமான வாழ்க்கையை  நாம் எதிர்பார்க்க முடியாது. நாளுக்கு நாள் பல பெயர் தெரியாத நோய்களால் அல்லல்பட்டும் கூட,  நம் நகர் மக்களுக்கு சுகாதாரம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. ஆகவே தான் பொது மக்கள் குப்பைகளை கொட்டும் பல்வேறு இடங்களிலும், சுகாதாரத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் கூடிய, பேனர்களை  ஒவ்வொன்றாக நிறுவி வருகிறோம். 




நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற போர்டுகளை ஏற்படுத்த உள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு சிறிதேனும் பயன் கிடைத்தாலும் அதனால் எங்களுக்கு மகிழ்ச்சிதான். இந்த நல்ல முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் கீழக்கரை நகராட்சிக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார். 

No comments:

Post a Comment