தேடல் தொடங்கியதே..

Friday 6 July 2012

கீழக்கரையில் நாளை (07.07.2012) நடைபெறும் இலவச கண் பரிசோதனை முகாம் !

இராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் இராமேஸ்வரம் சங்கர நேத்ராலயா இலவச கண் மருத்துவமனையின் மாபெரும் IOL லென்ஸ் பொருத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (07.07.2012) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, கீழக்கரை கிழக்குத் தெருவிலுள்ள கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் நடை பெற உள்ளது. இந்த முகாமை ரோட்டரி கிளப் ஆப் கீழக்கரை, சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை, கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.




இது குறித்து இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளர். சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர். திரு தங்கம் இராதாகிருஸ்ணன் அவர்கள் கூறும் போது "இந்த முகாமில் கண்ணில் நீர் வடிதல், கண்ணில் நீர் அழுத்தம், மாறு கண் பிரச்சனைகள், போன்றவைகள் பரிசோதிக்கப்படுகிறது. மேலும் கண் புரை நோயாளிகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப் படி லென்ஸ் இலவசமாக பொருத்தப்பட உள்ளது. 


கண் புரை ஆபரேசன் செய்ய மருத்துவமனைக்கு செல்ல ஆகும் போக்குவரத்து செலவுகள், உணவு, தங்குமிடம், அறுவை சிகிச்சை, சொட்டு மருந்து அனைத்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. கண் பாதிப்புள்ள அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment