தேடல் தொடங்கியதே..

Saturday 9 June 2012

கீழக்கரை பொதுமக்களை 'மன நோயாளிகள்' ஆக்கும் நகராட்சி அலுவலர்கள் - கொதிக்கும் பொது மக்கள் !

நம் கீழக்கரை நகராட்சியில் வரி விதிப்புக்கும், வீட்டு வரி மாற்றத்திற்கும், முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், சரியான பதில் கிடைக்கப் பெறாமல்,  இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொது மக்கள் அலைக்களிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இது குறித்து விளக்கம் கேட்க முனையும் போதெல்லாம், "ஆணையர் இல்லை.. அதனால் தான் தாமதம்" என்று மட்டும் பதில் வருகிறது. என்ன நோக்கத்திற்காக தாங்கள் அலைக்களிக்கப்படுகிறோம் என்று கூட தெரியாமல் பல அப்பாவிகள், நம் நகராட்சிக்கு நாள் கணக்கில் நடையாய் நடந்து திரிகின்றனர். இவர்கள் கடைசியில் கவுன் 'சிலர்' போர்வையில் இருக்கும் புரோக்கர் பெருமக்களை நாடியே, அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து வேலையை முடிக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.




இது குறித்து பாதிக்கப்பட்ட N.M.T. தெருவைச் சேர்ந்த செய்யது நாச்சியா அவர்கள் கூறும் போது "நான் கடந்த 28.03.2012 அன்று வீட்டு வரி மாறுதலுக்காக, முறையான ஆவணங்கள் இணைத்து விண்ணப்பித்தேன். அவர்கள் தந்த ஏற்புச் சீட்டில் 30.04.2012 தேதிக்குள், வரி மாற்றித் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த தேதியிலிருந்து நேற்று வரை 25 முறை நான் அலைக்கழிக்கப்பட்டு, இறைவன் அருளால், ஏறத்தாழ 72 நாள்கள போராட்டத்திற்கு பிறகு வரி விதிப்பு செய்த இரசீதை இன்று தான் கிடைக்க பெற்றேன். என்னை போல இங்கு நகராட்சி வரி விதிப்பு அலுவலர்களால் அலைக்கழிக்கப்படும் அப்பாவிகள் ஏராளம். இது போன்ற அலுவலர்களின் அராஜக செயல்களை கண்டித்து நமதூரின் அனைத்து பொது நல அமைப்பினரும் கேள்விகள் கேட்க முன் வர வேண்டும்." என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து மற்றொரு பாதிக்கப்பட்ட நபரான நடுத் தெருவைச் சேர்ந்த ஹாமீது இபுறாகீம் அவர்கள் கூறும் போது "நானும் வீட்டு வரி மாறுதல் செய்ய 16.02.2012 அன்று விண்ணப்பித்தேன். நான் எங்கே மன நோயாளியாகி விடுவேனோ ? என்று அச்சப்படும் வண்ணம் 30 க்கும் மேற்பட்ட தடவை சரியான பதில் கூறாமல் அலைக்களிப்புக்கு உள்ளாகி,  நகராட்சி தலைவர் அளவுக்கு புகார் தெரிவித்ததின் பேரில் சுமார் 55 நாள்களுக்கு பிறகு தீர்வு கிடைத்தது. நான் ஒவ்வொரு முறையும் என் மனு குறித்து விசாரிக்க செல்லும் போதெல்லாம், வரி விதிப்பு அலுவலர்கள் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்திருப்பதில்லை. தலைமை அலுவலரிடம் கேட்டால், 'அலுவலக பணி நிமித்தமாக மதுரையில் மீட்டிங்கில் இருக்கிறார். இராமநாதபுரம் கலக்டர் அலுவலகம் சென்றிருக்கிறார்' என்ற பதிலே வருகிறது. வாரத்தில் நான்கு நாள்களா...! வெளியே அரசுப் பணி ?? என்று தெரிய வில்லை.
.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல"

ஒரு வேலை அவர்களை கண்டு பிடித்து, என் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டால் எகத்தாளமான பதிலே வருகிறது. இவர்களின் நடவடிக்கைகள் அத்தனையும் மறைமுகமாக இலஞ்சப் பணத்தை எதிர்நோக்கியே இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் PROPER CHANNAL மூலமாக வரச் சொல்கிறார்கள். அதாவது கவுன் 'சிலர்' புரோக்கர்கள் வழியாக வரச் சொல்கிறாகள். இது போன்ற தரித்திரங்களை நகராட்சியிலிருந்து களை எடுக்காத வரை, ஒரு வேலையும் நியாயமாக நடக்காது." என்று பொரிந்து தள்ளினார்.

இது குறித்து கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல சங்கத்தின் (K.M.M.S) தலைவர் ஜமால் அசரப் அவர்கள் கூறும் போது "தொடர்ந்து எங்களுக்கு நகராட்சி வரி விதிப்பு அலுவலர்களின்  முறையற்ற போக்கு குறித்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்ததின் பேரில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மனுவும் எந்தெந்த அலுவலரின் மேஜையில் எத்தனை நாள்கள் இருந்தது? நீண்ட கால தாமதத்திற்கான காரணம் என்ன? வீட்டு வரி மாற்றத்திற்கான உரிய கால அவகாசம் எவ்வளவு? போன்ற கேள்விகளை கேட்டிருக்கிறோம். அவர்கள் தரும் பதில்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்." என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இது குறித்து கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம் கேட்ட போது "பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் புகார்கள் தந்திருக்கிறார்கள். இவர்கள் மீது நீண்ட காலமாக பல புகார்கள் இருக்கிறது. ஆணையரிடம் கலந்தாய்வு செய்து, தவறுகள் நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வரி விதிப்பு அலுவலர்கள் மீது துறைசார் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்" என்று தெரிவித்தார்.




இந்த அலைக்கழிப்புகள் அத்தனையும் இலஞ்சப் பணத்திற்காகவே நடைபெறுவதாக அப்பட்டமாக தெரிகிறது. ஆகவே இந்த இலஞ்சப் பேர்வழிகளும், இவர்களுக்கு உடந்தையாக முழு நேரப் பணியாற்றும் கவுன் 'சிலர்' புரோக்கர்களும், பகல் கொள்ளையாக, இலஞ்சம் பெறுவதற்கு பதிலாக, தங்கள் குடும்பத்தாருடனும், குழந்தை குட்டிகளுடனும் தெருத் தெருவாக திருவோடு ஏந்தி, பிச்சை எடுக்கும் படி எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அரசாங்கம் அள்ளி வழங்கும் சமபளத்தை விடுத்து.. கிம்பளத்தை எண்ணாதே ! இலஞ்சம் வாங்காதே.. பிச்சை எடு..

3 comments:

  1. நம்ம ஊருலத்தான் எல்லாகருமத்துக்கும் காச கொடுத்து பழக்கிட்டானுவளே!

    ReplyDelete
  2. நம்ம ஊருலத்தான் எல்லாகருமத்துக்கும் காச கொடுத்து பழக்கிட்டானுவளே!

    ReplyDelete
  3. know one is taking action for this, shali, if u take action i will bring lot of people behind u

    ReplyDelete