தேடல் தொடங்கியதே..

Monday 4 June 2012

கீழக்கரை நகரில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை !

நம் கீழக்கரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் S.S.L.C தேர்வுகளை எழுதி, முடிவுகளுக்காக காத்திருந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் எதிர் கால பாதையை தீர்மானிக்கும் விதமாக, இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.  இது வரை பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி. முஹம்மது ஹபீஷா 480 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகளில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.


இதில் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே பிளஸ் டூ தேர்விலும் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் 85 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்வு பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ஆர். வர்ஷினி 478 மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடம் பெற்றுள்ளார். மாணவி. இர்ஷாத் பாத்திமா 476 பெற்று  மூன்றாமிடம் பெற்றுள்ளார்.


இது தவிர கீழக்கரை நகரில் மஹ்தூமியா பள்ளி, ஹமீதியா பெண்கள் பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் 477 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 94 % தேர்ச்சியும் பெற்றுள்ளது. ஹமீதியா ஆண்கள் உயர்நிலை பள்ளியில் 417 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 93 %  தேர்ச்சியும் பெற்றுள்ளது. ஹமீதியா பெண்கள் பள்ளியில் 453 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 100 % தேர்ச்சியும் பெற்றுள்ளது.

முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் 464 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 94 % தேர்ச்சியும் பெற்றுள்ளது. மஹ்தூமியா பள்ளியில் 450 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 100 % தேர்ச்சியும் பெற்றுள்ளது. கீழக்கரை கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப்பள்ளி 94 சதவீத தேர்ச்சியுடன் இருக்கிறது. மாணவர். ஹிக்மத்துல்லா 436 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment