தேடல் தொடங்கியதே..

Friday 13 April 2012

கீழக்கரையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் - இளநீர், கரும்பு ஜூஸ் விற்பனை அமோகம் ! 'சித்திரை ஸ்பெஷல்'

கீழக்கரையில் கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கி விட்டது. இதனால் இளநீர், கரும்பு ஜூஸ், நன்னாரி சர்பத் மற்றும் நுங்கு, பழங்கள் விற்பனை முழு வீச்சில் நடைபெறுகிறது. உள்ளூர்வாசிகள் மற்றும் கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கோடை வெப்பத்தை தணிக்க இளநீர் அருந்தி மகிழ்கின்றனர்.  

'பாதுஷா சர்பத் ஸ்டால்' - இடம் : சின்னக்கடைத் தெரு 
இதமான இளநீர் கடை (இடம் : முஸ்லீம் பஜார்)


கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் உக்கிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் கடும் அவதிப்படுகின்றனர். கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் நம் நகரில் ஆங்காங்கே காணப்படும் ஜூஸ் கடைகளையே நாடுகின்றனர். 

கரும்பு ஜூஸ் கடை (இடம் : வடக்குத் தெரு பள்ளி அருகில்)
சில்லுன்னு ஒரு ஜூஸ் கடை (இடம் : முக்கு ரோடு அருகில்)


சாலையோர இளநீர், மோர் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. பொதுமக்கள் கோடை வெயிலை தணிக்க எலுமிச்சை, மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, வெள்ளரி, தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் பழங்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.

குளிர்ச்சியான தர்ப்பூசணி கடை (இடம் : முக்கு ரோடு)
'நாதன் மோர் கடை' (இடம் : ஜும்மா பள்ளி காம்ப்ளக்ஸ்)

கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக சாலையோரங்களில் பழரச கடைகள், கம்பங்கூழ் கடைகளும் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும், நுங்கு, பதநீர் போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இளநீர் விற்பனை களைகட்டி உள்ளதால், ஒன்றுக்கு ரூ.15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. செவ்இளநீர், பச்சை இளநீர், பொள்ளாச்சி, தேனி போன்ற பகுதிகளில் இருந்து  கொள்முதல் செய்து இங்கு விற்பனை செய்கிறார்கள்.

SAY SO 'டெய்லி பிரஸ்' பழமுதிர் சோலை (இடம் : V.S. சாலை)

இது குறித்து வள்ளல் சீதக்காதி சாலையில் 'சே-சோ டெய்லி பிரஸ்' 'என்ற பெயரில் ஜூஸ் மற்றும் பால் கடையை நிர்வகித்து வரும் ஜபருல்லா அவர்கள் கூறும் போது " நம்ம ஊர் மக்கள் பெரும்பாலும், பழரசம், பால் சர்பத், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, வெள்ளரி, தர்பூசணி போன்ற ஜூஸ் வகைகளை தான் அருந்தி செல்கின்றனர். ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர், வெப்பத்தை தணிக்க பெரும்பாலும் லஸ்ஸி மற்றும்   இளநீர் அருந்துவதை அதிகம் விரும்புகின்றனர். இறைவன் அருளால் வியாபாரம் நன்றாக இருக்கிறது." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment